Latest News

April 02, 2016

பீரிஸுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன்
by admin - 0

யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி பகு­தியில் கண்­டு ­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் வெள்­ள­வத்­தைக்கு கொண்­டு­வ­ரப்­பட இருந்தன என்று முன்னரே தெரிந்தும் அதனை பொலிஸா­ருக்கு தெரியப்­ப­டுத்­தாத முன்னாள் வெளி­விவ­கார அமைச்­ச­ராக இருந்த ஜீ.எல்.பீரிஸை புனர்வாழ்­வுக்கு உட்­ப­டுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன் தெரி­வித்­துள்ளார்.

சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பாக பல்­வேறு வித­மான கருத்­துக்கள் தெற்கு அர­சியல் வட்­டா­ரத்தில் பேசப்­பட்டு வரு­கின்ற நிலையில் அது தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரிடம் வினா எழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கடந்த 2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் வெடிச்­சத்­தங்­களோ பிரச்­சி­னை­களோ இல்­லாமல் இருக்­கின்ற நிலையில் சமா­தானம் பேசப்­ப­டு­கின்ற போது அச்­ச­மா­தா­னத்தின் ஊடாக இது­வரை தமிழ் மக்கள் அனு­ப­வித்த துன்ப, தூய­ரங்­க­ளுக்கு நிம்­ம­தி­யான வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வு கிடைக்­கு­மென நினைத்துக் கொண்டே நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்றோம்.
இந்­நி­லையில் சாவ­கச்­சேரி, மன்னார் பகு­தி­களில் மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் பொலிஸ் மற்றும் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களை வைத்து கொண்டு இவ்­வா­றான செய்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக ஆயு­தங்கள் இரா­ணு­வத்தால் கூட வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்­ப­தற்கும் சாத்­தி­யங்கள் உள்­ளன. அல்­லது கடந்த காலங்­களில் விடு­த­லைப்­பு­லிகள் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என்ற நிலையும் உள்­ளது. இவ்­வா­றான நிலையில் இத்­த­கைய விட­யங்­களை பெரிய பூதா­கா­ர­மான விட­ய­மாக சிங்­கள ஊட­கங்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பி­வ­ரு­கின்­றன.
தமிழ் மக்கள் இப்­போதும் யுத்த நினை­வோடு இருப்­பது போன்ற மாயையை உரு­வாக்கும் வகை­யி­லேயே செயற்­பட முனை­கின்­றன.

இதே­வேளை குறித்த ஆயு­தங்கள் வெள்­ள­வத்­தைக்கு கொண்­டு­வ­ரப்­பட இருந்­தது எனத் தெரிந்தும் அதனை முன் கூட்­டியே பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தாத முன்னாள் வெளி­வி­கார அமைச்­ச­ரா­கிய ஜீ.எல்.பீரிஸை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த வேண்டும்.

மேலும் அர­சாங்கம் எதற்கு புனர்­வாழ்­வ­ளிப்­பது என்று தெரி­யாமல் தொடர்ந்தும் தமிழ் மக்­களை அச்­சு­றுத்­து­கின்ற பாணியில் செயற்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள், போரால் பாதிக்­கப்­ப­ட­ட­வர்கள், முன்னாள் போரா­ளிகள் என அனை­வ­ரையும் நிம்­ம­தி­யில்­லாத வாழ்க்கைக்கு தள்ளும் வகையிலும் தொடர்ந்து யுத்த சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முயலுகின்ற செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்விடயத்தில் அனைவரும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments