Latest News

April 20, 2016

விக்கினேஸ்வரனை கைது செய்யுங்கள் சம்பந்­தனை உட­ன­டி­யாக பத­வி­வி­லக்குவது அவசியம்-பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய,ராவணா பலய
by admin - 0

ஆயு­தத்தின் மூலம் வென்­றெ­டுக்க முடி­யாத தமி­ழீ­ழத்தை அர­சி­யலின் மூல­மாக வெற்­றி­கொள்­ளவே வட­மா­காண முதல்­வரும், எதிர்க்­கட்சி தலை­வரும் முயற்­சிக்­கின்­றனர். நாட்­டிற்கும், அர­சியல் அமைப்­பிற்கும் எதி­ராக செயற்­படும் விக்­கி­னேஸ்­வ­ரனை உட­ன­டி­யாக கைது­செய்து கடு­மை­யாக தண்­டிக்க வேண்டும் என பொது­பல சேனா, சிங்­கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்­புகள் தெரி­வித்­தன.

அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யி­லி­ருந்து சம்­பந்­தனை உட­ன­டி­யாக நீக்­கி­விட்டு சிங்­கள தலைவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் . சிங்­கள மக்கள் மனங்­களில் புகைந்­து­கொண்­டி­ருக்கும் வெறுப்­பையும், கோபத்­தையும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக திருப்­பி­விட வேண்டாம் எனவும் அவ்­வ­மைப்­புகள் எச்­ச­ரித்­தன.

பொது­பல சேனா, சிங்­கள ராவய , ராவணா பலய ஆகிய சிங்­கள பெளத்த அமைப்­புகள் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அதன் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்

பொது­ப­ல­சேனா

செய்­தி­யாளர் சந்­திப்பில் பொது­பல சேனா அமைப்பின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே தெரி­விக்­கையில்,
ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ் தலை­வர்கள் நாட்டில் பிரி­வி­னைக்­கான ஆரம்­பத்தை இட்டுச் சென்­ற­மையே நாட்டில் பாரிய யுத்தம் ஒன்றை எதிர்­கொண்டு மிகப்­பெ­ரிய இழப்­பு­களை சந்­திக்க நேர்ந்­தது. 

பாரிய இன­வாத யுத்தம் ஒன்றை முடி­வுக்கு கொண்­டு­வந்து நாட்டில் மீண்டும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்தி சென்ற வேளையில் அதை குழப்பும் வகையில் மீண்டும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளன. தமிழ் சிங்­கள மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் வடக்கு மாகா­ண­ச­பையின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன. சர்­வ­தேச நாடு­களும், புலம்­பெயர் அமைப்­பு­களும் மீண்டும் வடக்கில் பிரி­வி­னைக்­கான அடித்­த­ளத்தை இட ஆரம்­பித்­துள்­ளன. ஆயு­த­மேந்தி நாட்டில் பிரி­வி­னை­யினை உரு­வாக்க முயன்ற போதிலும் எமது இரா­ணு­வமும் முன்­னைய அர­சாங்­கமும் அதற்­கான வாய்ப்­பு­களை வழங்­காது பிரி­வி­னை­வா­தத்தை முழு­மை­யாக அழித்­தன . ஆனால் இன்று மீண்டும் நாட்டில் பழைய மோச­மான நிலை­மைகள் உரு­வாக்கி வரு­கின்­றன.

எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் எப்­போதும் பிரி­வி­னை­வா­தத்தின் பக்கம் நின்று செயற்­ப­டு­பவர். அவரால் நல்ல எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்­பட முடி­யாது. தனித் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் ஒரே நோக்கம் மட்­டுமே இன்று அவர்­களின் மனங்­களில் உள்­ளது. இவர்கள் இன்று தமிழ் மக்­களின் மனங்­களில் பிரி­வி­னை­யினை விதைத்து நாட்டில் தமிழ் மக்­களை ஓரங்­கட்ட முயற்­சிக்­கின்­றனர். ஜன­நா­யகம் என்ற பெயரில் இவர்கள் புலி­களை ஆத­ரிக்கும் வேலைத்­திட்­டத்­தையே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என்றார்.

சிங்­கள ராவய

சிங்­கள ராவய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறு­கையில்,

மீண்டும் இன்று நாட்டில் விடு­த­லைப்­பு­லி­களின் ஆதிக்கம் தலை­தூக்க ஆரம்­பித்­து­விட்­டது. வடக்­கிலும் கிழக்­கிலும் இன்று ஆயுத புரட்சி ஒன்­றுக்­கான ஆயத்தம் நடை­பெற்று வரு­கின்­றது. அன்று விடு­தலைப் புலிகள் ஆயுதம் மூலம் நாட்டில் பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்தி தனித்த தமி­ழீழம் ஒன்றை உரு­வாக்க முயற்­சித்­தனர். ஆனால் தமி­ழீழம் உரு­வா­வதை நாம் அன்று தடுத்து நிறுத்­தினோம். எனினும் அன்று ஆயு­த­மேந்­திய புலி­களை அழித்து நாட்டில் விடு­த­லையை ஏற்­ப­டுத்­தி­னோமே தவிர அவர்­களின் அர­சியல் நகர்­வு­களை நாம் மறந்­து­விட்டோம். புலி­களின் அர­சியல் கட்­சியே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாகும். இன்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் ஆகியோர் தனித்த தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் பய­ணத்தில் தமது நகர்­வு­களை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர்.

தனித்த பிராந்­தியம் ஒன்றை உரு­வாக்கி தனி நாட்­டுக்­கான அல­கு­களை இப்­போதே முன்­வைத்து வரு­கின்­றனர். வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இன்று தெரி­விக்கும் கருத்­துகள் அனைத்தும் நாட்டின் ஐக்­கி­யத்தை சீர­ழிக்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. புலம்­பெயர் புலி­களின் நோக்­கத்தை நிறை­வு­செய்யும் வகை­யிலும், புலி­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகை­யி­லுமே இன்று அவரின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. விக்­கி­னேஸ்­வரன் சட்டம் அர­சியல் யாப்பு பற்­றிய தெளிவு இல்­லா­தவர் அல்லர். சட்டம் எவ்­வா­றாக செயற்­படும் என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரியும். அவ்­வாறு இருக்­கையில் விக்­கி­னேஸ்­வரன் நாட்­டுக்கும் அர­சியல் அமைப்­பிற்கும் எதி­ராக செயற்­பட்டு வரும் நிலையில் உட­ன­டி­யாக அவரை கைது­செய்து கடு­மை­யாக தண்­டிக்க வேண்டும்.

அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் மறு­மு­னையில் நாட்டில் பிரி­வி­னையை உரு­வாக்கி வரு­கின்றார். இவர் வடக்­குக்கும் கிழக்­குக்கும் மட்­டுமே எதிர்க்­கட்சி தலைவர் அல்ல. முழு நாட்­டையும் இவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாது தமிழ் மக்­களின் தலைவர் என்ற நிலை­யி­லேயே சம்­பந்தன் செயற்­பட்டு வரு­கின்றார். அர­சியல் அமைப்பு திருத்தம் மேற்­கொள்­வதில் தமிழ் மக்­களின் தனித் தாயகம் உரு­வாக வேண்டும் என்ற ஒரே நிலைப்­பாட்டில் அவர் செயற்­பட்டு வரு­கின்றார். ஆகவே இன்று வடக்கு முதல்­வரும் எதிர்க்­கட்சி தலை­வரும் நாட்டில் பிரி­வி­னையை உரு­வாக்கி வரு­கின்­றனர்.

இப்­போது அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பதை தெரி­விக்க வேண்டும். இவர்­களின் கருத்­துக்கு அர­சாங்கம் என்ன பதில் கூறப்­போ­கின்­றது. பிரி­வி­னையின் பக்கம் நாட்டை கொண்­டு­செல்லப் போகின்­ற­னரா அல்­லது நாட்டில் பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­களை அழிக்­கப்­போ­கின்­ற­னரா என்­பதை தெரி­விக்க வேண்டும். ஆனால் இன்று வட­மா­காண முத­ல­மைச்சர் மற்றும் எதிர்க்­கட்சி தலை­வரின் செயற்­பா­டு­களை கண்டு அர­சாங்கம் அஞ்­சு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே இன்று வடக்கின் செயற்­பா­டு­களை இவர்­களால் தடுக்க முடி­யா­துள்­ளது.

ஆகவே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை உட­ன­டி­யாக கைது­செய்து தண்­டிக்க வேண்டும். அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனை உட­ன­டி­யாக பதவி நீக்­கி­விட்டு சிங்­கள தலைவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும். சிங்கள தலைவர்களால் மட்டுமே நாட்டை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும். அதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கில் தமிழ் பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டை பிரிக்கும் இவர்கள் சிங்களவர்களை கண்டும் அஞ்ச வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலும், இராணுவத்தின் மத்தியிலும் இன்றும் புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் மனங்களில் புகைந்துகொண்டிருக்கின்றன. மீண்டும் நாட்டில் ஆயுத சூழல் ஒன்று உருவாகினால் சிங்கள மக்கள் பொறுமைகாக்க மாட்டார்கள் என்பதும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என்றார்
« PREV
NEXT »

No comments