Latest News

April 04, 2016

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும்
by admin - 0

சித்திரை நாலு சிதறின எம் மனங்கள்
ஊற்றடைத்து கொண்டது உங்கள்
மூச்சு ஊமை ஆகி போனது எங்கள் நாவு
வன்னி மண்ணே வரலாற்றில் என்றேனும்
வந்த பகை வென்றதுண்டோ??
உலகமும் சதி செய்தது உள்ளூர்
சிங்களமும் விஷம் வைத்தது..!

முப்படையிலும் தேரோட்டிய உங்கள்
நினைவுத் தடயங்களில் இன்று எங்கும்
எதிலும் சிங்களவன் செருப்பு தடயங்கள்
வியூகம் உடைக்க வந்த பகை அழித்து
விரட்ட தலைவன் குரல் எழுப்பி
வாவென்று அழைக்கு முன்னே
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்களே..!

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி
விடுதலையே மேலோங்கி
எம் தேசத்திற்காக அர்பணித்த
பிரிகேடியர்களே..!

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து
விடுதலையை சிரசில் வைத்து
அந்த ஒன்றையே சிந்தித்து
எங்கள் மனங்களெல்லாம்
கண்ணீர் தூவிச் சென்றவர்களே..!

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி
வெளியே குயிலெனப்பாடி, நதியென
ஓடித்திரிந்த உங்கள் நினைவுகளும்
தாயக மண்ணும் அதன் வரலாறும்
என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்..!

ஒரு கணம் நினைவுகள் ஒடுக்கியே
உங்கள் நினைவுகளை எம் நெஞ்சில்
சுமந்து இன்னாளில் வீர காவியமான
உங்கள் நினைவுகளோடு நாம் இங்கே
போர்க்கள விடி வெள்ளிகளே
உங்களுக்கு வீரம் நிறைந்த
தாயக கண்ணீர் பூக்களை
காணிக்கை ஆக்குகின்றோம் !!
வீர வணக்கங்கள் !!

கவிவரிகள்:-மார்ஷல் வன்னி

ஆனந்தபுரத்திலே ஆகுதியாகிய அக்கினி பிளம்புகளே...









« PREV
NEXT »

No comments