தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் யாழ் பல்கலைக்கழ ஆசியர் சங்கம் சார்பில் கலாநிதி G.திருக்குமரன் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்
இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் நிபுணர் குழுவை உருவாக்குதல், ஜ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கான குழுவை உருவாக்குதல், மற்றும் கலை, கலாச்சார விடயங்களை கையாள்வதற்கான குழுவை உருவாக்கல் போன்றவற்றுக்காக இவ் அமர்வு இடம்பெறுகின்றது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற கேள்விக்கு மத்தியில் அவர் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்தன் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
No comments
Post a Comment