Latest News

November 11, 2015

தமிழ்கைதிகள் உடனடியா விடுதலை செய்யப்பட வேண்டும் : தடுத்து வைத்திருப்பது அனைத்துலக சட்டவிதிகளுக்கு முரணானது !
by Unknown - 0

சிறிலங்காவின் சிறைகளில் எவ்வித அடிப்படையுமின்றி தொடர்ந்தும் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அனைத்துலகச் சட்டங்களை மீறும் செயலாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த செப்ரெம்பர் மாதம் 30ம் நாளன்று ,ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மதிப்புமிகு சயித் அல் {ஹசைன் அவர்களால், அவரது பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான விசாரணைகளின் பயனாக சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளியிட்டப்பட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

‘சிறிலங்காவில் இடம்பெற்ற போரும் அதன் பின்விளைவுகளும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களினாலும் மனிதாபிமானச் சட்டங்களினாலும் குற்றவியல் சட்டங்களினாலும் கட்டுப்படுத்தப்பட்டவை’ என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டடிருந்தது.

சிறிலங்காவின் சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளும், 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரோடு தொடர்பானதாகவே கைது செய்யப்பட்டவர்களாவர்.

எனவே, அனைத்துலக சட்டங்களுக்கு அமைய தமிழ்க் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

அனைத்துலக சமூகம் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம் :

தமிமிழ்க் கைதிகள் அனைவரும் அனைத்துலக சட்ட விதிகளின் படி பாதுக்காப்புக்கு உரியவர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித முடிவும் இன்றி இவர்களைத் சிறையில் வைத்திருப்பது ஜெனீவா சட்டவிதிகளையும் வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களையும் மீறும் செயலாகும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும் போர்க்கைதிகள் எனப் பகிரங்கமாக அறிவித்தல் வேண்டும்.

அனைத்துலக சட்ட விதிகளுக்கமைய, இக்கைதிகளின் உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அனைத்துலக சட்டத்திற்குப் முரணாக இவர்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மீது நீதி விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

யுத்த காலத்தில் இணக்கப்பாட்டாளராக செயற்பட்ட நோர்வே அரசினையும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது இணைத் தலைமை வகித்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளையும், இவ்விவகாரத்திர் தலையிட்டு அனைத்துலக சட்ட விதிகளின் கீழ் சிறிலங்கா அரசுக்கு உள்ள பொறுப்பினை வலியுறுத்த வேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.

முக்கியமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மதிப்புமிகு அல் {ஹசைன் அவர்கள் தனது செல்வாக்கைப் பிரயோகித்து சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரி நிற்கின்றது.

இதேவேளை தடுப்பில் உள்ள தமிழ்கைதிகளால் மீளவும் தொடங்கப்பட்டுள்ள அறவழிப் போராட்டத்துக்கும், இதற்கு உறுதுணையாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற துணைப் போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவ்விவகாரத்தினை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, புலம்பெயர் சிவில் சமூக அமைப்புக்களை செயலாற்ற வேண்டுவதோடு, எதிர்வரும் 16ம் நாள் முதல் அடையாளா உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிவில் மேற்கொள்ள இருக்கின்றது.

நன்றி

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

வி. ருத்திரகுமாரன்
பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
« PREV
NEXT »

No comments