Latest News

October 21, 2015

பிரித்தானியாவில் மாவீரர் தமிழினியின் வீரவணக்க நிகழ்வு – அனைவரையும் அணிதிரள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு
by admin - 0

பிரித்தானியாவில் மாவீரர் தமிழினியின் வீரவணக்க நிகழ்வு – அனைவரையும் அணிதிரள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு

இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டு, வெலிக்கடைச் சிறையிலும், பூந்தோட்டம் வதைமுகாமிலும் கொடும் வதைகளுக்கு உட்பட்டு, அவற்றின் விளைவாகப் புற்றுநோய்க்கு ஆளாகிக் கடந்த 18.10.2015 அன்று சாவை அணைத்துக் கொண்ட வீரவேங்கை கேணல் (இளை.) தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவின் வெளிமாநில நகரமான கொவன்ரி பகுதியில் நடைபெற இருக்கின்றது.

எதிர்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு The Indian Community Centre, 243 Cross Road, Coventry CV6 5GP எனும் இடத்தில் நடைபெற இருக்கும் மாவீரர் தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வில் பிரித்தானியாவின் அனைத்து வெளிமாநில உறவுகளையும் பங்கேற்றுத் தமிழீழத்தின் வீரத்தலைவிக்கு வீரவணக்கம் செலுத்துமாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதேபோன்ற இன்னுமொரு வீரவணக்க நிகழ்வு பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
« PREV
NEXT »

No comments