Latest News

October 11, 2015

சுவீஸ் வாழ் மக்களிக்கான ஒரு வரலாற்று கடமை தர்சிகாவை வெற்றி பெற வைப்பதே
by admin - 0

சுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18 திகதி நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் 200 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆயிரத்துக்கு மேற்பாட்ட  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் இந்த நிலையில் சோசலிச ஜனநாயக கட்சி சார்பாக ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் போட்டியிடுகின்றார்.

 சுவிஸ் நாட்டில் இதுவரை எந்த தமிழர்களும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆறுபது ஆயிரத்துக்கு மேற்பாட்ட தமிழர்கள் வாழ்த்து வருகின்றோம் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கூட நாங்கள் தெரிவாக்க முயட்சிக்கவில்லை?

தாயகத்தில் நடைபெற்றது இனவழிப்புதான் என்று நீண்டகாலமாக குரல் கொடுத்துவரும் தர்சிகா சிறுவயது முதல் தாயகபற்றுகொண்டவர் அதற்கான பல வேலைகளை மேற்கொண்டுவந்துள்ளர்.

அத்துடன் சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை உரிமையுடன் பேசுவதற்கு தமிழர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகவேண்டும் அந்த வகையில் இந்தமுறை தேர்தலில் போட்டியிடும் தர்சிகாஅவர்களை பேர்ண் வாழ் தமிழ்மக்கள் ஆதரிப்பதுடன் வெற்றிபெறவைப்தற்கான வேலைகளையும் மேற்கொள்ளவேண்டும் தமிழ் அமைப்புக்கள் பல தமது ஆதரவுகளை செய்துவரும் நிலையில் வாக்களர்களும் தமது கடமைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் புலம் பெயர் நாட்டில் வாழும் மக்கள் மிகவிரைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கவேண்டும் எனவே அனைத்து தமிழ்மக்களும் இனவுனர்வுக்கு மதிப்பளித்து ஒன்றினையுமாறும்  உரிமையுடன் வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றனர்


« PREV
NEXT »

No comments