Latest News

October 11, 2015

மனோரமா ஆச்சி ஊர்வலத்தில் கடைசி வரை இருந்த மக்கள் வெள்ளம்!
by Unknown - 0

இன்று தமிழ் சினிமாவுக்கு கருப்பு நாள், மாபெரும் நடிகை மனோரமா ஆச்சி மாரடைப்பால் இன்று நேற்று காலமானார்.இவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் வைக்கப்பட்டு இருந்தது. 

பல்வேறு நடிகர்கள், தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று மாலை மயானத்தில் அடக்கம் செய்ய மனோரமா ஆச்சி உடல் எடுக்கப்பட்டபோது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தி.நகரிலிருந்து மயிலாப்பூர் செல்வதற்கே கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் மேல் ஆனது, எதையும் பொருட்படுத்தாமல் ஊர்வலத்தின் பின் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் வந்து கொண்டிருந்தனர். 

இது ஒரு நல்ல படைப்பாளிக்கு அவர்கள் செய்யும் கடமையாக எண்ணினர். இரவு 7.05 மணிக்கு மனோரமாவின் உடலுக்கு அவரது மகன் பூபதி தீ மூட்டினார்.மனோரமாவின் உடலுக்கு மரியாதை செலுத்திய அஜித், விஜய் உட்பட முன்னணி நடிகர்கள்.
« PREV
NEXT »

No comments