தம்புள்ளை விவசாய சங்கத்தின் தலைவரை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து தாக்கிய குற்றச் சாட் டில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹேரத் முதியன்சலாகே திஸ்ஸ பண்டார ஹேரத் தம்புள்ளை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட் டார்.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் தம்புள்ளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 21ஆம் திகதி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து மாகா ண சபை உறுப்பினரும் பிறிதொருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக தம்புள்ளை விவசாய சங்கத் தலைவர் பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார். இது தொடர்பான விசாரணையை அடுத்து மாகாண சபை உறு ப்பினர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் நேற்று தம்புள்ளை நீதிவா னின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபரான மாகாண சபை உறுப்பினர் நீதிவான் முன் னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments
Post a Comment