Latest News

October 14, 2015

மஹிந்த கைதுசெய்யப்படலாம் -பரபரப்பில் கொழும்பு
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொது கட்டணம் செலுத்தாமல் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை 9 மணி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையிலும் குறித்த விவகாரம் தொடர்பில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில  வேளை கைதாகலாம் என குறிப்பிடப் படுகிறது.
« PREV
NEXT »

No comments