அமெரிக்காவில் 8 வயது சிறுமியை சுட்டுக் கொலை செய்த 11 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வளர்ப்புப் பிராணியான நாய் குட்டியை காண்பிக்க மறுத்ததால் குறித்த சிறுமி மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரான சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை இந்த கொலைக்காக பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கமைய திட்மிட்ட வகையில் சிறுமியை கொலை செய்ததாக சந்தேகநபரான சிறுவனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த 2 சிறுவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment