Latest News

September 29, 2015

இன்னும் சிறை­களில் தமி­ழர்கள்; இது நல்­லாட்­சியா ,இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது -வினோ நோகராதலிங்கம்
by Unknown - 0

சிறை­களில் எமது தமிழ் இளை­ஞர்­களை அர­சியல் கைதி­க­ளாக அடைத்து வைத்துக்­கொண்­டி­ருக்­கும்­போது நல்­லாட்சி என்று கதைப்­பது வெட்­க­க்கே­டான செயல் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட காரியாலயத்தில் நடந்த பல்கலைக் கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல்
நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இளை­ஞர்­களின் கரங்­க­ளி­லேயே ஒரு­நாட்டின் தலை­விதி தங்­கி­யுள்­ளது. இளை­ஞர்­களை நல்­வழிப்படுத்­தவும் புரிந்­து­ணர்வு, விட்­டுக்­கொடுக்கும் தன்மை என்­ப­வற்றை வளர்க்­கவும் விளை­யாட்­டுக்கள் உந்துசக்­தி­யாக அமை­கின்­றன. கடந்­த­கா­லத்தில் விடுத லைப்­போ­ராட்­டத்தில் பல்­லா­யி­ரக்­கணக் கான இளை­ஞர்கள் எமக்­காக மிகப்­பெரிய தியா­கங்­களை புரிந்து மாண்­டுள்­ளனர். அவர்கள் இன்று அவ்­வா­றான தியா­கங்க ளை செய்­யாமல் இருந்­தி­ருப்­பார்­களானால் எமது அர­சியல் பலம் இன்று சர்வதேசத்­திற்கு சென்­றி­ருக்­காது.

ஒருநாள் அவர்­களின் தியா­கத்­திற்­கான தீர்வு எமக்கு கிடைக்கும் என்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது. தற்­போது நல்லாட்சி மலர்ந்­துள்­ள­தாக பலர் கூறு­கின்­றனர். ஆனால் இலங்­கையில் உள்ள பல சிறை ச்சாலை­களில் எமது நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள் விடு­த­லை­ செய்­யப்­ப­டாமல் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்­ளனர். அவர்கள் விடு­த­லை ­செய்­யப்­ப­ட­ வேண்டும் என புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­திரி பத­வியேற்ற பின் தமிழ்த் ­தே­சி­யக் ­கூட்­ட­மைப்பு வேண்டுகோள் விடுத்தது.

அது­ ந­டை­பெ­ற­வில்லை. தற்­போது பாரா­ளு­மன்­ற­த் தேர்தல் முடிவடைந்து ஒரு ­மா­த­மா­கி­ய­ போதும் எவ­ருமே விடுதலை செய்­யப்­ப­ட­வில்லை. எமது இளைஞர்கள் தொடர்ந்தும் சிறை­களில் வதை­படும் போது அவர்­களை விடு­தலை­ செய்­ய­முடியாத நிலை இனிமேலும் தொடரக்கூடாது .

எந்­தப்­ ப­த­வி­களை நாம் பெற்­றாலும் சிறை­களில் உள்ள எமது இளை­ஞர்­களை விடு­த­லை­செய்ய முடி­யாமல் இருக்­கு­மானால் இவ்­வா­றான பத­விகளை தூக்கி எறியவும் குறிப்பாக எமது கட்சியும் நாங்களும் தயாராக இருக்கிறோம்

. எம்மில் சிலர் அர­சியல் என்­பது அபி­வி­ருத்­திதான் என்று கரு­து­கி­றார்கள். அத­னால் ­ப­த­வி­களை அபி­வி­ருத்திக்காக பயன்­ப­டுத்­த ­வேண்டும் என நினைப்­ப­தை­யிட்­டு நாம் ஒன்றும் செய்­ய­முடி­யாது. எமது உரி­மைக்­கான போராட்டம் அபி­வி­ருத்­தியில் மட்டும் கவனம் செலுத்­தி­யி­ருந்தால் தந்­தை­ செல்வா காலத்தில் எமது தலை­வர்கள் பல அமைச்­சுப் ­ப­த­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்று வடக்கு, கிழக்கு தா­ய­கத்தை சிங்­கப்­பூ­ராக மாற்­றி­யிருக்க முடியும். அதனை தந்தை செல்வா செய்யவில்லை. எமக்­கான சுய­நிர்­ணய உரிமை கிடைக்­க­வேண்டும். அதனூடான அபிவிருத்தியே எமக்கு தேவை என்பதில் இலட்சியப்பற்றுடன் செயலாற்றினார் என்றார் .
« PREV
NEXT »

No comments