இந்த சூழலில் ரசிகர்கள் மனதில் புயலை கிளப்பும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் வீடு மற்றும் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படி சோதனை நடக்கிறதே என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து தான் அவர்கள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பற்றி கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.
No comments
Post a Comment