தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பினை வழங்கியதாக பாகிஸ்தானுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் விஜயாந்தி எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பல்கலைக்கழகமொன்றில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகச் சிறந்த பாதுகாப்பு உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர். எதிர்வரும் காலங்களில் இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்திக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளும் பிராந்திய வலயத்தின் பொருளாதார நல்லிணக்கத்திற்கும் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment