Latest News

September 19, 2015

சிறந்த விவசாயவியலாளருக்கான 2015 ஆம் ஆண்டுக்கான விருது
by admin - 0

2015 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான விவசாயவியலாளருக்கான விருது விவசாய திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மகாநாட்டில் வைத்து சகிலாபானு அஸரக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
445+சிறந்த விவசாயவியலாளருக்கான 2015 ஆம் ஆண்டுக்கான விருது

அகில இலங்கை ரீதியிலாக விவசாய திணைக்கள உத்தியோகத் தர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதில் சிறந்த வெளிப்படுத்துகைகளை மேற்கொண்டு சுயாதீன நடுவர் குழு வால் தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் இவ் விருதை பெறும் முதலாவது தமிழ் மொழி மூல உத்தியோகத்தருமாவார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் வவுனியா விவசாய கல்லூரியின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்ற இவர் விவசாய திணைக்களத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தை பெற்றதுடன் முதுமாணி பட்டங்களை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார்.

வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உதவி பண்ணை முகாமையாளராக பதவியேற்ற இவர் 2011 ஆம் ஆண்டு இலங்கை விவசாய சேவையில் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.

சுமார் நான்கு வருடங்கள் அவர் வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களிலும் விவசாயத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments