Latest News

August 14, 2015

ஜனாதிபதியிடமிருந்து காதல் கடிதமொன்று கிடைத்தது – மஹிந்த ராஜபக்ஸ
by Unknown - 0

நேற்றைய தினம் (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பில் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது மஹிந்த ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

ஜனாதிபதியிடமிருந்து நேற்றைய தினம் காதல் கடிதமொன்று கிடைத்தது. அதனை இன்று காலை தான் நான் வாசித்தேன். பல யோசனைகள் இருந்தன. அவற்றில் சில நாளாந்தம் கூறுபவை. 113 ஆசனங்களுக்கு அதிகமாக கிடைத்தால், இந்த யோசனைகளை செய்யலாம். 

113 ஆசனங்களுக்கு குறைவாகக் கிடைத்தால், இவற்றை செய்யலாம். சிறிய யோசனையொன்று மாத்திரம் மங்களகரமாக இல்லை. அதனை நான் நன்மையாகவே எடுத்துக்கொண்டேன். நன்றி தெரிவித்து சிறிய பதிலொன்றை அனுப்பினேன். அந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? அது சிறந்த காதல் கடிதமாகும்.
« PREV
NEXT »

No comments