Latest News

July 23, 2015

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே நாம் போராடுகின்றோம்
by admin - 0

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும்நடைபெற்றதுஅவ் ஊடகவியலாளர் சந்திப்பில்கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலம் வந்தவுடன் திம்புக்கோட்பாடுஎன்றும் சுயநிர்ணயம் என்றும் கத்தித் திரிபவர்கள்தேர்தல் முடிவடைந்த மறுநாளே 13ம்திருத்தச்சட்டத்திற்குள் மாகாண சபை அதிகாரம்எங்களிற்கு போதும் என்று கூறுகின்றார்கள்
கடந்த 30 வருடங்களிற்கு முன்புமாகாணசபைதான் தமிழர்களிற்கு தீர்வு எனதிணிக்கப்பட்டபோது அதைஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்று குத்துக்கரணம்அடித்து மாகாணசபையே தமிழருக்கான தீர்வின்ஆரம்பப் புள்ளி எனக்கூறி மாகாணசபையில் ஆட்சிஅமைத்துள்ளார்கள்
கடந்த 2010 இற்கு முன்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களிற்குப்பொறுப்பாக நாம் இருந்தபோது வெளிநாட்டுத்தூதுவர்களைச் சந்திக்கின்றவேளை தமிழ்த்தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களிற்கான தீர்வுஎன வலியுறுத்துவோம்
அப்போது அவர்கள் எங்களிற்கு கூறுவார்கள் இதுபுலிகளுடைய கருத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதிகாரப் பரவலாக்கத்திற்குச்சம்மதிக்கின்றதுதேசியம்சுயநிர்ணயம் என்பதுபுலிகளுடைய கருத்து அதனை ஏற்கமுடியாதுமக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின்கருத்தினையே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்என்று அவர்கள் கூறினார்கள்.
தேர்தல் காலத்தில் திம்புக் கோட்பாடுதான் தீர்வுதேசியத்தை தாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்என்று கூறி வாக்குகளைப் பெற்றபின்னர்தேர்தலிற்கு மறுநாள் 13ம் திருத்தமே தீர்வுமாகாணசபையே ஏற்றுக்கொள்கின்றோம் மக்கள்அதற்கே ஆணை வழங்கினார்கள் என்றுகூறுவார்கள்
இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் காலங்காலமாகமக்களை ஏமாற்றுபவர்களை தமிழ் மக்கள்புரிந்துகொள்ளவேண்டும்எம்மைப் பொறுத்தவரைதமிழ்த் தேசத்தின் எதிர்காலம் ஒருதிருப்புமுனையில் இருக்கின்றதுமுன்பிருந்தஇதே நிலைமை தொடருமாயின் இன்னும் ஐந்துவருடத்தில் தமிழ்த் தேசியத்தின் இருப்புஅழிந்துபோய்விடும்
எம்மைப்பொறுத்தவரை மாற்றம்அத்தியாவசியமானதுமாற்றத்தை ஏற்பாடுத்தாதுகடைசிவரைக்கும் எம் இனத்தைக் காப்பாற்றமுடியாதுஅந்த மாற்றத்தை ஏற்படுத்தும்நோக்குடனேயே நாங்கள் தேர்தலில் களம்இறங்கியுள்ளோம்.
தமிழீம விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாடுதமிழ் மக்களுடைய நிலைப்பாடுதமிழீழவிடுதலைப் புலிகள் உருவாக்குவதற்கு முன்பே ஒருநிலைப்பாடு இருந்தது
அந்த நிலைப்பாடு மிதவாதிகளால் 1976 ஆம்ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டதுவட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தீர்வுஎன்றார்கள்
நாம் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒருநாட்டிற்குள் இரு தேசத்தை உருவாக்குவோம்தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம்இதனை வேறு ஒரு தரப்புமுன்னெடுத்தாலும் அதனை நாங்கள்ஏற்றுக்கொள்வோம் என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments