தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25ம் திகதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடத்தில் எதிர்வரும் 25ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரையில் வைத்து இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
கடந்த நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருநதது.
இந்த பணிகள் நேற்று இரவுடன் நிறைவடைந்ததாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அதியுச்ச அதிகாரப் பகிவு கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment