Latest News

July 27, 2015

தேர்தலின் பின் பலமான தமிழ்தேசிய அணி உருவாகுமா?
by admin - 0

எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 

புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது.
 
இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் தமிழ்தேசிய முன்ணனிக்கும் 3-4 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் கூட்டமைப்பின் ஆசனங்கள் ஒரு இலக்கத்துக்கு தள்ளப்படலாம் என கூறப்படுகிறது அதாவது 5-9 ஆசனங்களையே கூட்டமைப்பு கைப்பற்றும் என கூறப்படுகிறது. அத்துடன் சுமத்திரன், சம்பந்தன் தோல்வி அடைவார்கள் எனில் தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து பலமான ஒரு தேசிய அணியாக உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது . எல்லாம்தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

« PREV
NEXT »

No comments