Latest News

July 24, 2015

யாழில் ஒருவர் கடத்தல்?
by admin - 0

வடக்கு மாகாண சபையின் முன்னாள் வேட்பாளரும் வர்த்தகருமான மு.தம்பிராஜாவின் மகனை காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடத்தலாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

      நேற்று மதியம் கொழும்பிலிருந்த தனது மகனை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த நிலையில்  யாழ்.நகரில் வைத்தே மகன் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். மகனின் உடைமைகள் அனைத்தும் யாழ்.நகரில் உள்ள கடை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
      
இது தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது இரவு வரை கிடைக்கப்பெறவில்லை. எனினும் இம்முறைப்பாடு தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.


« PREV
NEXT »

No comments