Latest News

July 23, 2015

யாழ்.மாவட்டத்தில் 5 தேர்தல் முறைப்பாட்டு மையம்
by admin - 0

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக யாழ்.மாவட்டத்தில் 5 தேர்தல் முறைப்பாட்டு மையம் மைக்கப்பட்டுள்ளதாக யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
யாழ்.தேர்தல் மாவட்டத்தினை பொறுத்தவரையில் இதுவரையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 
 
இருப்பினும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் இதுவரையில் 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படடுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை உடனடியாகவே எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த பல்வேறு செயற்பாடுகள் தேர்தல் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதன்படி யாழ்.மாவட்ட செயலகம் உட்பட வேலணை, சாவகச்சேரி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களிலேயே இம் முறைப்பாட்டு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டு அலுவலகங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
இம் முறைப்பாட்டு அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள், தகவல் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை அவர்கள் மேற்கொள்வார்கள். மேலும் தேர்தல் வன்முறைகள், சட்டவிதிமுறைகளை மீறிய பிரச்சார நடவடிக்கைகள் போன்றவற்றினையும் இம் முறைப்பாட்டு அலுவலகங்களில் உள்ளவர்கள் கண்காணிப்பார்கள்.
« PREV
NEXT »

No comments