பீல்ட் மார்ஷல் பதவி எடுத்த போர் குற்றவாளி சரத் பொன்சேகாவிற்கு எதிராக கோர்ட மார்ஷலில் பொய் சாட்சி சொன்ன போர் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் எதிரியின் சரத்தின் பழிதீர்க்க ஆதரவு கொடுத்தற்கு சிறப்பாக கவனித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்றுக்கு அருகில் 60 பேர்ச் காணி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவின் தலையீட்டில் சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் தற்போது பாரிய மாளிகை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாட மாளிகையை கோடீஸ்வர வர்த்தகருக்கு அமைக்க முடியுமே தவிர மாதாந்த சம்பளம் பெறும் இராணுவ மேஜர் ஜெனரலுக்கு அமைக்க முடியாது. எனவே இதுகுறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆராய வேண்டும் ஆனால் சிங்கள அரசுகள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை தற்போது உள்ள அரசு சிங்களவர்களின் கூட்டால் உருவாக்கப்பட்டுள்ளது முன்னைய அரச இயந்திரமே இப்போதும் நடைபெறுகிறது.
தெஹிவளை - கல்கிஸ்ஸ மேயர் தகசிறி அமரதுங்க இந்த விடுதியின் பங்குதாரர் என்பதால் நகரசபையில் பெற்றுக் கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் கூட இல்லாது சவேந்திர - தனசிறி இந்த ஹோட்டலை நடத்திச் செல்கின்றனர்.
இன்று கூட இது நடத்தப்படுகிறது ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
No comments
Post a Comment