Latest News

March 30, 2015

பிரித்தானியா வாழ் தமிழா தமிழனை வெற்றி பெறவைப்போம்
by admin - 0

லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ் மகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

லண்டன் Pinner, Northwood and Ruislip பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக போட்டியிட உள்ளார்.

Pinner, Northwood and Ruilisp மட்டும் சுமார் 2,500 ஈழத் தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரது வாக்குகளும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கத்து செல்ல வேண்டும் அப்படி என்றால் தான் நாம் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் தமிழ் மகன் ஒருவரை முதன் முறையாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதிநிதிதுவப்படுத்த முடியும்.

கனடாவில் தமிழர்கள் எவ்வாறு இணைந்து ராதிகா சிற்சபேசனை MP ஆக்கினார்களோ. அதுபோல லண்டன் தமிழர்கள் நினைத்தால் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கத்தை வெற்றிபெறச் செய்யலாம்.

இதனூடாக எமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்.

சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆதாரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை 21/03/2015 Northwoodல் நடைபெற்றுள்ளது.
நடை பெற்ற கூட்டத்தில் கலந்துகெண்டு உரையாற்றிய யோகலிங்கம் அவர்கள், இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்றும், அதனை சர்வதேசம் நடத்த தானும் தனது கட்சியும் கடும் அழுத்தத்தை கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு லேபர் கட்சி ஆட்சியில் இருந்தவேளை, இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
இத்தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. நேஷனல் லிபரல் கட்சி பிரித்தானியாவில் தமிழர்களோடு நீண்ட கால உறவில் உள்ள ஒரு கட்சியாகும்.

எனவே வரும் மே மாத தேர்தலில் தமிழர்கள் நிச்சயம் தமது வாக்குகளை திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம், நேஷனல் லிபரல் கட்சிக்கும் இடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments