Latest News

January 22, 2015

எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் அதிலுள்ள எச்சரிக்கை மணிகள் ஒலித்தன
by admin - 0

எயார் ஏசியா கியூ.இஸட். 8501 விமானம் கடந்த மாதம் ஜாவா கடலில் விழுந்து விபத்­துக்­குள்­ளா­வ­தற்கு முன்னர், அந்த விமா­னத்­தி­லி­ருந்த எச்­ச­ரிக்கை மணிகள் ஒலித்ததாக மேற்­படி விமான விபத்து தொடர்­பான விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
விமா­னிகள் விமா­னத்தை ஸ்திரப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட போது அந்த விமா­னத்தின் இயக்கம் ஸ்தம்­பி­த­ம­டை­வதை குறிக்கும் எச்­ச­ரிக்கை ஒலி உட்­பட பல எச்­ச­ரிக்கை ஒலிகள் அந்த விமா­னத்தின் விமா­னி­யி­னது அறை­யி­லி­ருந்த கறுப்புப் பெட்டி ஒலிப்­ப­திவு கரு­வி­களில் பதி­வா­கி­யுள்­ள­தாக பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த அதி­காரி கூறினார்.
இந்த எச்­ச­ரிக்கை ஒலி­களின் இரைச்சல் கார­ண­மாக விமா­னிகள் இறு­தி­யாக என்ன உரை­யா­டி­னார்கள் என்­பதை அறிய முடி­யா­துள்­ள­தாக இந்­தோ­னேசிய தேசிய போக்­கு­வ­ரத்து பாது­காப்பு சபையை சேர்ந்த அந்த விசா­ர­ணை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார்.
மேற்­படி விமா­ன­மா­னது கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்­தோ­னேசிய சுர­பயா நக­ரி­லி­ருந்து சிங்­க­ப்பூ­ருக்கு 162 பேருடன் பய­ணித்த வேளை விபத்­துக்­குள்­ளாகி ஜாவா கடலில் மூழ்­கி­யது.
இது­வரை அந்த விமா­னத்தில் பய­ணித்த 53 பேரின் சட­லங்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன.
ஏனை­ய­வர்களது சடலங்கள் கடலின் கீழ் மூழ்­கி­யுள்ள அந்த விமா­னத்தின் பிர­தான பாகத்தில் சிக்­கி­யி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது.எனினும் கடு­மை­யான நீரோட்டம் கார­ண­மாக மேற்­படி பாகத்தை நீர்­மூழ்கி வீரர்கள் நெருங்க சிர­மப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கிறது.
அந்த விமானம் ஸ்தம்­பி­த­ம­டை­வ­தற்கு முன்னர் நிமி­டத்­துக்கு 6000 அடி உய­ரத்தில் மேலெ­ழுந்­துள்­ள­தாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னாஸியஸ் ஜொனான் தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு விமானமும் இவ்வாறு விரைவாக மேலெழுவதற்கு முயற்சித்ததில்லை என அவர் கூறினார்.
« PREV
NEXT »