உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்கள் போட்டியிடும் பகுதிகளில் பல விரும்பத் தகாத செயல்கள் இடம் பெற்று வருகின்றது . 41 ம் வட்டாரத்தில் போட்டியிடும் சிவவதனி பிரபாகரனின் பதாகைகள் பல இடங்களில் தொடர்ச்சியாக இரவிரவாக அகற்றப் படும் கிழிக்கப் பட்டும் வருகின்றன.
இதுபற்றி போலீஸில் முறைப்பாடு செய்த போது அவர்கள் ஒரு சில தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் தான் இதை செய்வதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்கள்.
இது பற்றி சிவவதனி அவர்கள் தெரிவிக்கையில் ,இந்த வட்டாரத்தில் தனக்குப் பெருகி வரும் ஆதரவைப் பொறுக்க முடியாமல் சில விஷமிகள் இவ்வாறு செய்வதாகவும் தன்னை உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையச் செய்வதே இவர்களில் நோக்கம் என்றும் இதனால் தன பாதிக்கப் படப் போவது இல்லை என்றும் இச் செயல்கள் தனக்கு வலிமை தருவதாகவும் சிவவதனி பிரபாகரன் தெரிவித்தார்.
No comments
Post a Comment