யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெறவிருந்த பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற போதே ஓமந்தையில் வைத்து கஞ்சா பொருளை கொண்டு சென்றதாக கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடக பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (25.7.14) மாலை கொழும்பு நோக்கி வான் ஒன்றில் புறப்பட்ட 7 ஊடகவியலர்களே இவ்வாறு ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்கள் பயணித்த வாகனம் மாங்குளம் பகுதியில் பொலிஸாரினால் தடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Social Buttons