எப்படி: நெல் விதைகளை ஊறவைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்தவுடன் நீரில் ஊறவைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன் டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப்பெயர் பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்தி ருந்து பின்னர் வழக்கம் போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும்.
No comments
Post a Comment