Latest News

November 23, 2011

கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?
by admin - 0

நமீதா குட்டைப்பாவாடை அணிவதை விரும்புவார். இதைப் போய் பிரச்சினையாக்குவதா என்று கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.அப்படியானால் அவரது வீட்டுக்கு கோவணம் அணிந்தபடி 200 பேர் வந்தால் அவர்களை அவர் சந்திப்பாரா, வரவேற்பாரா அல்லது பேசத்தான் செய்வாரா என்று இந்து மக்கள் கட்சி கேட்டுள்ளது.



சினிமா நடிகைகள் பலர் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், குட்டைப் பாவாடை அணிந்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு, நடிகை ஷ்ரேயா படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்து அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

இந்த நலையில் நமீதா அணியும் கவர்ச்சி ஆடைகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து 'கருத்து புகழ்' குஷ்பு கருத்து தெரிவிக்கையில்,

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச் செல்வார்.

ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று கூறியிருந்தார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பி.ஆர்.குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக்கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.

கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா?

அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments