இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேட்பாளர்களாக 9 பேரின் பெயர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி யாழ்.மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் 9பேரின் பெயர்களாக சி.க.சிற்ற ம்பலம், சொலமன் சிறில், நாச்சியார் செல்வநாயகம், மயில்வாகனம் தேவராஜ், அந்தோனிப் பிள்ளை மேரியம்மா, மேரிகமலா குணசீலன், சூ.செ.குலநாயகம், கனகநமநாதன், அ.குணபால சிங்கம் ஆகியோர்,
தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment