March 24, 2015

யாழில் மீனவரின் படகு எரிப்பு

படகு எரிப்பு
படகு எரிப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சம்பாட்டி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு ஒன்று நேற்று இரவு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாராந்தனையை சேர்ந்த ஏ.அசோகன் என்பவரின் படகே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. இந்த படகு எரிக்கப்பட்டதால் அந்த மீனவருக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.