December 28, 2014

நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்­துக்­கொண்­டிருக்கும் ஒரு தந்தை

நெருப்பில் விழுந்த புழுவாய் 
துடித்­துக்­கொண்­டிருக்கும் ஒரு தந்தை
தொடர்ந்து கஷ்­டத்தை தந்த கடவுள் நெஞ்­சுக்குக் கீழ இயக்கம் இல்­லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்­துதான் எனக்கு வர­மாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியா­னிப்பேன் காரணம் இடுப்­புக்குக் கீழ இயக்­க­மில்­லாமல் இருப்­பதால் எனக்கு பசி தெரி­யாது"
மனித வாழ்க்­கையில் நாளொரு மேனியும் பொழு­தொரு வண்­ணமும் மாற்­றங்கள் நிகழ்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. பல­ருக்கு அவை ஆரோ­க­ணத்தில் அமைந்­தாலும் சில­ருக்கு அவ­ரோ­க­ணத்தைக் கடந்து பூச்­சி­யத்தில் நிறை­வ­டை­கின்­றது. நேரிய சிந்­தனை கொண்­ட­வர்கள் படிப்­ப­டி­யாக முன்­னேற்றம் அடைந்து செல்­வார்கள் என்­பார்கள். அவ்­வா­றான சிந்­த­னையில் தானுண்டு தனது வேலை­யுண்­டென இருப்­ப­வர்­களின் வாழ்க்கை கூட திடீ­ரென மாறு­கின்­றது.
ஆம் இல்­ல­றத்தில் இணைந்து தனது குழந்­தை­க­ளுடன் மகிழ்ச்­சி­யாக வாழ்க்­கையை நடத்­திக்­கொண்­டி­ருந்த கால­மது. கைக்­கு­ழந்­தையின் அழு­கை­யையே தாங்­க­மு­டி­யாத அந்த இளம் குடும்­பஸ்தன் அழு­கையை நிறுத்­து­வ­தற்­கான கார­ணத்தை தேடிய போது காலனின் விளை­யாட்டால் அவ­னது எதிர்­கா­லமே கரைந்து விட்­டது. உயி­ரி­ருந்து இன்று நடை­பி­ண­மாகி ஒவ்­வொரு நொடியும் நெருப்பில் சிக்­கிய புழுவாய் மனம் வெந்­து­கொண்­டி­ருக்­கின்றான் தற்­போது 35வய­தாகும் பெரி­யண்ணன் ஆனந்­த­ராசா. அவ­ருக்கு நிகழ்ந்த அவ­லத்தை இவ்­வாறு கூறு­கின்றார்.

கைக்­கு­ழந்தை பாலுக்கு அழு­குது. சீனி வாங்­கினால் பால் கரைத்­துக்­கொ­டுக்­கலாம் என்று தரைப்பாழ் கூடா­ரத்தை விட்டு வெளியே வந்து 5 மீட்டர் தூரம் நடக்­கேல்ல பின்­னால வந்த ஷெல் என் முதுகை பதம் பார்த்து விட்­டது. உடனே பக்­கத்­தில நின்­றவை மாத்­தளன் கொஸ்­பிட்­ட­லுக்கு கொண்டு போய் சேர்ப்­பித்­தவை. வடிந்­தோடும் இரத்­தத்தை கட்­டுப்­ப­டுத்­தி­னார்கள். புண்­களை ஆத்­தி­னார்கள். ஆனால் பதம்­பார்த்த பீசை எடுக்­க­வில்லை. விலா எலும்­புக்குப் பக்­கத்­தில பீஸ் இருக்கு புண் ஆறி­விட்­டதே தவிர நெஞ்­சுக்குக் கீழ எனக்கு இயக்கம் இல்லை.
கைவேலி புதுக்­கு­டி­யி­ருப்­பில சொந்த நிலம் வாங்கி நான் தனிய ஒவ்­வொரு வேலை­யாக செய்து பார்த்துப் பார்த்து வீட்டக் கட்டி பெற்­றோரின் விருப்­பப்­படி திரு­மணம் செய்து நிறைந்த வரு­மா­னத்­துடன் நிறை­வான வாழ்வு வாழ்ந்து வந்தேன்.
வீட்டைச் சுத்தி வாழை, கமுகு, மா, பலா என பயன்­தரு மரங்­க­ளோட இரண்டு பெண்­பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வந்தேன். யார் கண்­பட்­டதோ தெரி­ய­வில்லை. 2009 இல் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைய தொடங்கி விட்­டது. எனவே கைக்­கு­ழந்­தை­யோட இருக்கும் நாங்கள் பாது­காப்பை தேடி முத­லிலே செல்வோம் என புதுக்­கு­டி­யி­ருப்பு வலைஞர் மடத்­துக்கு போய் அங்கு தரைப்பாழ் கூடா­ர­ம­மைத்து வெய்­யி­லுக்கும் மழைக்கும் பாது­காப்பு தேடி­னோமே தவிர அங்­கங்­களை செய­லி­ழக்கும் அள­விற்கு ஆபத்தை தேடிக் கொள்வோம் என எதிர்­பார்க்­க­வில்லை.
சீனி வாங்கப் போன நான் காயப்­பட்டு மாத்­தளன் வைத்­திய சாலைக்குச் சென்று முகா­முக்கு வரும்­போது மூத்த மகள் 7 வயது இளை­யவள் ஒரு வயது கைக்­கு­ழந்தை. மனைவி மூன்­றா­வது குழந்­தை­யாக என்­னையும் வீல் சியா­ருடன் ஏற்­றுக்­கொண்டார். பின்னர் மீள் குடி­யேற்றம் என்ற பெயரில் சொந்த வீட்­டுக்கு வருவோம் என்று வந்தா இங்கு அத்­தி­வாரம் மட்­டும்தான் இருந்­தது.
2 கைக்­கு­ழந்­தை­க­ளோட அவ­ய­வங்கள் செய­லி­ழக்­கப்­பட்ட என்­னையும் ஒரு புறத்­தில இருத்தி விட்டு மனைவி மெல்ல மெல்ல புற்­களை வெட்டி தற்­கா­லிக வீடு அமைத்தோம். பின் 5 இலட்­சத்து 50 ஆயிரம் வீட்­டுத்­திட்டத்தில் ஓர­ளவு பூர­ண­மாக்­கப்­பட்ட வெய்யில் மழை­யில இருந்து எம்மைப் பாது­காக்கக் கூடி­ய­ள­வில கட்டி இருக்கோம். மிகு­தியை முடிக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்­கவே இல்லை. காரணம் காயப்­பட முன் என்­னென்ன வேலை கிடைக்­கி­றதோ அதெல்­லாத்­தையும் கறன்ட்(மின்சாரம்)  இல்­லாத நேரத்­தி­லயும் இரவு பக­லாக செய்து நன்­றாக இருந்­தம். இன்று சாப்­பாட்­டுக்கு பிற­ரிடம் கையேந்தும் நிலையில் நானும் என் குடும்­பமும் இருக்கும் போது என்­னென்டு வீட்­டுத்­திட்­டத்தை பூர்த்தி செய்ய முடியும்.
சரி அதுதான் வரும் அதி­கா­ரி­க­ளுக்கு எமது நிலையை விளக்கிக் கூறி­னாலும் இப்ப இரண்டு பிள்­ளை­களும் பள்­ளிக்­கூடம் போரவை. மூத்த மக­ளுக்கு 13 வயது 8ஆம் வகுப்பு படிக்­கிறா. இளை­யவ 8 வயது 3 ஆம் ஆண்டு படிக்­கிறா. இரு­வரும் வல்­லி­புரம் கனிஷ்ட வித்­தி­யா­லயத்தில் படிக்­கினம் வீட்­டில இருந்து பள்­ளிக்­கூ­டத்­துக்கு 3 கி.மீ. போக வேணும். றோட்­டுக்கு போய் பஸ்­ஸில ஏத்தி விட்டா இரு­வரும் போவினம்.
ஆனால் வரும்­போது இருவரும் ஒன்­றாக 4 மணிக்­குத்தான் வரு­வார்கள். காரணம் 2 மணிக்கு பள்­ளிக்­கூடம் விட்டு றோட்­டுக்கு வந்தால் இ.போ.ச. பஸ் மட்டும் தான் பிள்­ளை­களை ஏத்­துமே தவிர தனியார் பஸ்கள் இங்க பள்­ளிக்­கூட பிள்ளைகள ஏத்த மாட்­டாங்க. பிள்­ளைகள் நின்­றாலும் ஆசி­ரி­யர்கள் மட்டும் ஏறுங்கோ என்று பஸ்ஸை எடுத்­தி­டு­வினம். சைக்கிள் இருந்தா மனைவி ஓடுவா கூட்­டிக்­கொண்டு போய் கூட்டி வருவா. என்ன செய்­வது பழஞ் சைக்கிள் என்­றாலும் ஒன்றை வேண்­டுவம் என்று நினைப்­பதே தவிர செயற்­ப­டுத்த எங்­க­ளிடம் மூல­தனம் இல்லை.
அன்­றாடச் செயற்­பாட்டை எடுத்துக் கொண்டால் காலை­யில பிள்­ளை­க­ளுக்கு செய்­யிற சாப்­பாட்டை நானும் மனை­வியும் மதியம் வச்சு சாப்­பி­டுவம். மதியம் பிள்­ளைகள் பாட­சா­லை­யில குடுக்­கிற சாப்­பாட்டை சாப்­பிட்டு விட்டு வரு­வார்கள். பிறகு வீட்­டில இருக்­கி­றத வச்சு இராப்­பொ­ழுத சமா­ளித்து கொள்­ளுவம். ஆனால் இப்ப பள்­ளிக்­கூடம் விடு­தலை விட்­டிட்­டுது. பிள்­ளைகள் ரொம்ப கஷ்­டப்­ப­டு­கி­றார்கள்.
எனக்கு தொடர்ந்து வீல்­சி­யார்ல இருந்து படுக்­கைப்புண் வந்து இப்­பதான் கொஞ்சம் சுகம். கடந்த மூன்று மாதம் குப்­பு­றப்­ப­டுக்­கை­யி­லேயே இருந்து கஷ்­டப்­பட்டு புண்ணை மாத்தி எடுத்தன். அதை­விட கொஸ்­பிட்­ட­லுக்கு மாதா மாதம் கிளி­னிக்­குக்கு போறன். விலா எலும்­பில பீஸ் இருக்கு. எடுக்க ஏலாது எடுக்­கி­ற­தென்­றாலும் 5 இலட்­சத்­துக்கு மேல செல­வாகும். ஆனால் எடுத்தால் சில நேரம் கழுத்­துக்கு கீழ இயங்­காமல் போய்­விடும் என்­றார்கள்.
பீஸை எடுத்தால் நடக்க முடியும் என்றால் காணியை வித்­தா­வது ஒப்­பி­றேசன் செய்­தி­டுவன். ஆனால் காசைக் கொடுத்தும் கழுத்­துக்குக் கீழே இயங்கா விட்டால்.என்ன செய்­வது என்­றதில் சத்­திர சிகிச்­சையை மறந்து விட்டேன். வருத்தம் மாறாது என்று தெரிந்தும் கிளி­னிக்­குக்கு போறது யூரின் பாக் கோஸ் யூரின் ரியுப் பன்டேச் எல்லாம் போனால் இல­வ­ச­மாக கிடைக்கும் என்­பதை நம்­பியே போறது. சில நேரம் அங்க மருந்து இல்லை என்றா ஒரு மாதத்­துக்கு தேவை­யா­ன­வற்றை பாம­சி­யில தான் வாங்க வேனும்.
ஆனால் எல்லா விதத்­திலும் தொடர்ந்து கஷ்­டத்தை தந்த கடவுள் நெஞ்­சுக்குக் கீழ இயக்கம் இல்­லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்­துதான் எனக்கு வர­மாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியா­னிப்பேன் காரணம் இடுப்­புக்குக் கீழ இயக்­க­மில்­லாமல் இருப்­பதால் எனக்கு பசி தெரி­யாது. வயித்து நோ தெரி­யாது. அதே போல் சாப்­பா­டுகள் எல்லா வகை­யாலும் சாப்­பிட ஏலாது. மாமிசம் முற்­றாக சாப்­பிட ஏலாது. ஆக உப்­புக்­கஞ்சி மாத்­தி­ரம்தான் என்­னால குடிக்க முடியும். அதேபோல் இயற்­கைக்­கடன் கழிப்­பது ஒருநாள் விட்டு ஒருநாள். மனைவி நல்லா படிச்­சவா வீட்­டில 5 பெண் பிள்­ளை­களில் மூத்­தவா என்­ப­தினால் வெள்ளன திரு­மணம் செய்­திட்டா. அதேபோல் வெள்ளனே வாழ்க்­கையின் சந்­தோ­ஷத்­தில பாதியை தொலைத்து விட்டா. அவாக்கு பின்னால் உள்ள 4 பெண் சகோ­த­ரங்­களும் இவ்­வ­ளவு இடப்­பெ­யர்வு கஷ்­டத்­துக்கு மத்­தி­யில படிச்சு பல்­க­லைக்­க­ழகம் சென்று இருவர் பட்­ட­தா­ரி­க­ளாக வெளியேறி விட்­டார்கள். இருவர் வெளியேறப் போகி­றார்கள். மனை­வியின் படிப்­புக்கு வேலைகள் கிடைக்கும். ஆனால் என்னை பரா­ம­ரிப்­ப­தற்­காக அவர் வேலைக்குச் செல்ல முடி­யாத நிலையில் இருக்­கிறார்.
ஒரு மனி­த­னுக்கு கிடைக்­கக்­கூ­டிய அதி­க­பட்ச தண்­ட­னையை எனக்கு வழங்கி விட்டார். அது என்­னோ­டயே முடி­யட்டும். என் பிள்ளைகள நன்­றாக வாழ வைக்க வேண்டும் என்றே நான் இப்ப கட­வு­ளிடம் கேட்­பது ஆனால் கட­வுளும் தான் என்ன செய்­வது வன்­னியை பொறுத்­த­வரை யாருக்­குத்தான் இரங்­கு­வது. இருந்­தாலும் என் மனை­வியின் முயற்­சியால் நான் மாதா மாதம் கொஸ்­பிட்­ட­லுக்கு போய் வரு­கிறேன். பஸ்­ஸில ஏத்­தி­றது என்­றாலும் மனைவி தடுக்குப் பிள்­ளை­களை தூக்­கு­வது போலவே என்னை தூக்கி ஏத்­தி­றது. அதே போல் இறக்­கு­வது. காரணம் என்ர உடம்­பில எந்த இடத்­தில பீஸ் இருக்கு? எந்த இடத்­தில புண் இருக்கு? என்று மனை­விக்­குத்தான் தெரியும்.
35 வய­தில வீட்­டுக்கு காவ­லாக இருக்க வேண்­டிய நான் இன்று 30 வயது மனை­வியின் தய­வில வாழும் நிலைக்கு தள்­ளப்­பட்டு விட்டேன். என்ர நிலையை புரிய முடி­யாத என் பிள்ளை. மூத்­தவா கேட்பா, அப்பா பள்­ளிக்­கூடம் நடந்து போக கால் உளை­யுது போய் வந்து படிக்க முடி­யாது. சாப்­பிட்டு வாற சாப்­பாடு பள்­ளிக்கு 2 மணித்­தி­யா­லத்­துக்­குள்ள செமிச்சு போகுது. பஸ்­கா­ரனும் ஏத்­துறான் இல்ல என்று சொல்லி அழும் நாள் தான் அதிகம். அதேபோல் சின்ன மகள் சொல்­லுவா அப்பா அக்­காவை எல்லாம் தூக்கி வச்சு படம் எடுத்­தி­ருக்­கி­றீங்கள். ஏன் என்னை மட்டும் தூக்­கி­றதே இல்லை என்று சின்­னப்­பிள்ளை கேட்கும் கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்ல முடி­யாத பாவி­யாக நான் வாழ்ந்து வரு­கிறேன்.
இவ்­வா­றான அவல நிலையில் மீள் குடி­யேற்­றப்­பட்டு இன்­று­வரை எந்த ஒரு அர­சி­யல்­வா­தியோ அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களோ ஏன் தமி­ழர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எந்த அமைப்­புக்­களோ எங்­களை வந்து பார்க்­கவோ அல்­லது ஒரு சல்­லிக்­காசு கூடத்­த­ர­வில்லை.
வெளிநாட்டு வீட்­டுத்­திட்­டமும் மஹிந்த சிந்­த­னை­யூடாக வலு­வி­ழந்­தோ­ருக்கு மாதாந்தம் கிடைக்கும் 3 ஆயிரம் ரூபா காசும்தான் எங்­க­ளுக்கு கிடைத்­தது. அந்த மூவா­யிரம் ரூபாவும் கடந்த 6 மாத­மா­கத்தான் கிடைக்­கி­றது. அதை விட ஒக்ஸ்பாம் நிறு­வ­னத்தின் கிணறு வெட்ட சீமெந்தும் மண்ணும் தந்­தவை. நாங்கள் ஆள்­பி­டிச்­சு­வெட்டி கிணறு கட்டி இருக்­கிறம்.
நல்லா இருந்த குடும்பம் சந்­தர்ப்ப சூழ்­நி­லையால் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்ட பின்னும் அவர்­க­ளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் வெகு­மதி மாதம் 3 ஆயி­ரமும் 5 இலட்­சத்து 50 ஆயிரம் அரை­குறை வீட்­டுத்­திட்­டமும் கல்லும் மண்­ணும்தான். இருந்­தாலும் எங்­க­ளிடம் மனோ­திடம் இருக்கு. நாங்கள் எந்த ஒரு அர­சி­யல்­த­லை­மை­க­ளையும் நம்பி வாழ விரும்பவில்லை. உப்பு விக்கப்போனால் மழை பெய்யுது மா விக்கப்போனால் காத்தடிக்குது என்ற மாதிரி பெரிய கோழிக்கூடு அடித்து கோழி வளர்க்க தொடங்கி அத்தனை கோழியும் விடலைப் பருவத்துக்கு வர வெள்ளம் வந்து கோழி எல்லாம் செத்துப்போச்சு. அதே போல வளவில பசுவை வாங்கி விட்டன். புல் வளர்ந்திட்டுது. ஆனால் நின்ற பசு செத்துப் போச்சு. எனவே என் கஷ்டங்கள் உணர்ந்து எனக்கு உதவி செய்ய யாராவது விரும்பினால் எங்களுக்கு கொஞ்சக் கோழியும் பசு மாடும் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு சைக்கிளும் முற்றுப்பெறாத வீட்டை முடிப்பதற்கு உதவியும் செய்து தாங்கோ. காலமுள்ளவரை நாங்கள் உங்கள் வாழ்விற்காகவும் பிரார்த்திப்போம். இந்த இளம் குடும்பதலைவனின் உள்ளக்குமுறலை ஒரு தரம் சிந்திப்போம். இரு பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உதவியளிப்போமாக