May 03, 2014

வேலணை சரவணை கரம்பொன் கிராமத்தின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் ஆள்களற்ற வீடொன்றில் இருந்து இன்று சனிக்கிழமை மதியம், ஒரு தொகுதி ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்து ஒரு ஏ.கே.47 துப்பாக்கி,ஒரு மகஸின்,15 தோட்டாக்கள் என்பனவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்