May 03, 2014

யுக்ரெயினின் இராணுவ நடவடிக்கை

யுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களை வெளியேற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஒடேஸ்ஸா பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரிய வன்முறைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றைதினம் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அரச கட்டிடம் ஒன்றுக்கு வைத்த தீயிரனால் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இதேவேளை ஒடேசாவில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.