September 12, 2013

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ பணி நீக்கம்!

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சிடமிருந்து உரிய அனுமதியின்றி 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும் இக்குற்றச்சாட்டை இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவரும்,அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ வித்தியாலயத்தின் அதிபருமான பிரியந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார். உரிய அனுமதியைப் பெற்றே தான் பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment