
நான்காவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவுகூரும் நாள் மே 18,19..எழுக எழுகஉலகத்தமிழ் இனமே எழுக எழுகவே -----.21 ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் கண்கள் விழித்தபடி வேடிக்கை பார்த்து இருக்க வன்னிமண்ணில் மாபெரும் தமிழ் இனப்படுகொலைகளை செய்த இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்க வேண்டாமா?எங்கள் சொந்த தொப்புள் கொடி உறவுகளை நெஞ்சில் நிறுத்தி தீபங்கள் ஏற்ற வேண்டாமா ?அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்தனர்.ஆனால் தமிழ் இனம் ஓய முடியுமா?எம்மினத்தின் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக இனப்படுகொலைகள் செய்யப்பட்டது உங்களுக்கு வலிக்கவில்லையா?இறுதிவரை போராடவேண்டும் என்ற இனமான உணர்வை தோற்றுவிக்கவில்லையா?யோசியுங்கள் உறவுகளே யோசியுங்கள் உலகத்தமிழ் இனமே!இனப்படுகொலைகள் செய்யப்பட்ட அனைத்து எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றுவோம்.உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம். வெல்க தமிழ் .
No comments:
Post a Comment