தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்.
கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைகழக பல்கலைகழக மாணவர் ஓன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளை தெரிவு செய்யுங்கள் கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்கொடுக்ககூடிய அடையாளம் கண்டு வாங்களியுங்கள் என மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்கள் விரக்தி மனோநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வரவேண்டும் எனவும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments:
Post a Comment