May 18, 2018

தலைவர் அனுமதி கொடுத்தாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் seeman



இசைப்பிரியா குறித்து விபரணப்படத்தை எடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அனுமதி கொடுத்தாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இசைப்பிரியா குறித்து படம் எடுப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது. இந்த திரைப்படம் எடுக்க வேண்டியதற்கான என்ன தேவை இருக்கின்றது.

இதனால் தமிழ் மக்களுக்கான உரிமை கிடைத்துவிட போகின்றதா? இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி லங்காசிறி


No comments:

Post a Comment