புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதை தீர்ப்பாயம் உறுதி செய்ததுஅரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம், கண்கண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட வைத்திய அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும் தீர்ப்பாயம் இதனை உறுதி செய்தது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.
தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்கின்றார்.
இதன்படி, 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர் என்று தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது
No comments:
Post a Comment