காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் இன்று 75ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தங்களது போராட்டத்திற்கு இன்று வரையில் எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை என அங்கு போராடும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment