December 06, 2016

நாளை பிரான்ஸில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி.

 

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் துயரில் ஈழத்தமிழராகிய நாங்களும் தமிழக மக்களுடன் இணைந்து பங்குபெற்று கொள்கின்றோம்.முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழக சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் ஈழத் தமிழரின் விடியலுக்கான போராட்டத்துக்கு உந்து கோலாக அமைந்தது.



என்றும் ஈழத்தமிழர்களின் நெஞ்சில் செல்வி ஜெயலலிதா வாழ்வர் .

நாளை 07.12.2016 புதன்கிழமை செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு அஞ்சலி பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் 15:00 மணிக்கு நடைபெறும்.

அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் அன்போடு கேட்டு கொள்கின்றோம்.

ம.கஜன்


 

No comments:

Post a Comment