தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் வித்து 2ம் லெப் மாலதி அக்காவின் தந்தையான பேதுரு அவர்கள் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்..!!
தமிழீழதேசத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசித்தவரும், தமிழீழதேசத்தின் விடுதலைப்பயணத்தில் முதல் பெண் வித்தாக வீரச்சாவடைந்த இரண்டாம் லெப்டினன் மாலதி (செல்வி சகாயசீலி) அவர்களை தமிழீழதேசத்துக்கு அளித்த நாட்டுப்பற்றாளரான பேதுருப்பிள்ளை அவர்கள் 4/12/2016 அன்று மன்னர் ஆட்காட்டிவெளியில் உள்ள அவரது வீட்டில் காலமாகியுள்ளார்.
எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!
No comments:
Post a Comment