சரவணை ஜே.21 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தவிசாலன் பானுசன் 17 வயது உடையவரின் சடலமே இவ்வாறு காட்டுப்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 01.08.2016 திங்கட்கிழமை வீட்டிலிருந்து காணாமற்போன நிலையில் பொலிஸாரிடம் முறையிட்டு தீவிர தேடுதலின் பின் இன்று (02.08.2016) காலை மஞ்சவண்ணா மரத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது மரணம் கொலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment