நாம் தமிழர் கட்சியின் சிங்கப்பூர் பொறுப்பார்களாக செயல்பட்ட மகாலிங்கம், காசி, விஜயகுமார் ஆகியோர் கடந்த வெள்ளியன்று சிங்கப்பூர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டு விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பில் நீங்கள் இங்கிருந்து செயல்பட்டது தவறு என்று தெரிவிக்கப்பட்டனர்.
எங்கள் தேசம், வேல்வீச்சு புத்தகம் வாங்கி விநியோகித்ததும், உறுப்பினர் அட்டை அடித்து வாங்கித்தந்ததும் 2 குற்றசாட்டுகள். இரண்டு நாட்கள் இதை தவிர வேறு ஏதும் குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் இந்தியா திருப்பியனுப்பட்டனர்.திருப்பியனுப்பட்ட நாம் தமிழர் தம்பிகள் அனைவரும் கிராமத்திலிருந்து குடும்பபாரம் சுமக்க கூலிவேலைக்கு சிங்கப்பூர் சென்றவர்கள். இன்னமும் அவர்கள் அங்கே செல்லவதற்கு வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாதவர்கள். அவர்கள் திருப்பியனுப்பட்ட செய்தி அறிந்து அவர்களின் குடும்பங்கள் அடுத்து என்னசெய்வதென்றரியாமல் கவலையில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியை ஆதரித்த ஒரே காரணத்திற்காக அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதை எண்ணி அண்ணன் சீமானும் கட்சியினரும் கவலையில் உள்ளோம்..
உண்மை இவ்வாறிருக்க புலிகளுக்காக நிதி வசூலிச்ச நாம் தமிழர் இயக்கத்தினர் என்று மனசாட்சியே இல்லாமல் செய்திவெளியிட்டுள்ளது பதிவு இணையதளம்.. இது மிகுந்த கண்டனதிற்குரியது.. செய்தியை இருப்பக்கமும் விசாரித்து வெளியிடவேண்டும் என்ற அடிப்படை அறமில்லாமல் வெளியிடப்பட்ட அந்த செய்தியை உடனடியாக நீக்கி வேண்டும் என்று கோருகிறோம். இந்த செய்திக்கு சம்பந்தமே இல்லாத படத்தை தவறாக வெளியிட்டதற்கு மன்னிப்பை எதிர்பார்க்கிறோம்..
இச்செய்தியை பற்றிய விவரம் அறியத்தர நாங்கள் தயாராய் இருக்கிறோம்.. பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் நேரடியாக பேட்டி எடுக்க ஏற்பாடும் செய்து தருகிறோம்..
— கு.செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
நாம் தமிழர் கட்சி,
ராவணன் குடில்,
சென்னை.
9600709263
04443804084
naamtamizhar@gmail.com
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அத்துடன் அந்தச்செய்தியை பதிவு இணையம் தற்பொழுது நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment