அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் இன்று (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் விடுதலையில் நாடகமாடி வரும், திமுக அதிமுக கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் அரங்க குணசேகரன், பொழிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை, தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி , மே பதினேழு இயக்கத் தோழர்கள் அருள்முருகன், லேனா குமார், திருமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.












No comments:
Post a Comment