April 22, 2016

மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும்

பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் என சபை முதல்வரும் , அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொல்கவரவெயில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெ ளிநாடுகள் எமக்கு உதவிகளை வழங்க முன்வரவில்லை. சர்வதேசத்திற்கு முன்னிலையில் எமது நாட்டிற்கு கௌரவம் இருக்கவில்லை. நாடு தனிமைப்பட்டிருந்தது. மூன்று வருடகாலமாக தொடர்ச்சியாக 3 தடவைகள் எமக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பயங்கரமான நிலைமையே கடந்த ஆட்சியில் காணப்பட்டது. உலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் சர்வதேசம் விடுத்திருக்கும். எமது நாடும், மக்களும் செய்த புண்னியம் மஹிந்த தோல்வி கண்டார். நாடும் மக்களும் பாதுகாக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment