மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குருவிட்ட - பட்டதொட்ட பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் குருவிட்ட பட்டதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கைத்தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி பலியாகியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment