March 11, 2016

மார்ச் 8 மில்லியன் பெண்கள், லண்டன் பேரணியில் தமிழ் பெண்களின் நீதிக்கான நடை!

சர்வதேச மகளிர் தினத்தை மையப்படுத்தி லண்டனில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் பெண்கள் பேரணில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடையும் இணைந்துகொண்டது.
அனைவரும் பெண்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் பல்லின பெண்கள் பல்வேறு கோரிக்கைகள், நிலைப்பாடுகளை முன்னிறுத்தி இடம்பெறும் இப்பேரணியில் இலங்கையில் தமிழ் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் இதன் போது நீதி கோரப்பட்டது.




நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சின் ஒருங்கிணைப்பில் அதிகளவான தமிழ் பெண்கள் பங்கெடுத்திருந்தனர்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் ( oxford circus) இல் தொடங்கிய இந்த பேரணி Trafalgar Square இல் முடிவடைந்தது.

இலங்கை இராணுவத்தின் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய தமிழ் பெண்களுக்கான நீதியினைக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, இலங்கையின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment