February 02, 2016

தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப்போவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைதுவிடாது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடுவதானது தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகும்.

இதன்காரணமாக நாம் ஒருபோதும் தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment