இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் 2016 ம் ஆண்டுக்கான தனியாள் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட மட்டப் போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 20ம், 21ம் திகதிகளில் மு.ப 8.30 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் 7 வயதின் கீழ், 9 வயதின் கீழ், 11 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ், 20 வயதின் கீழ், என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெறவுள்ளன. வயதுகள் 2016-01-01ல் உள்ளவாறாக கணிப்பிடப்படும்.
20 வயதுப் பிரிவினருக்கு மாவட்ட மட்டத்தில் போட்டிகள் நடைபெறாது நேரடியாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
15, 17 வயதுப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களும், குறித்த பிரிவுகளில் போட்டிகளில் பங்குபற்றும் 6 மாணவர்களுக்கு ஒருவர் வீதமும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
7, 9, 11, 13 வயதுப்பிரிவுகளில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும். இவ்விபரங்கள் போட்டி முடிவில் அறிவிக்கப்படும்.
இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதுடன் , பங்குபற்றும் மாணவர்களது பெயர் விபரம் அடங்கிய விண்ணப்பங்களை பொறுப்பாசிரியர் எதிர்வரும் 19ம் திகதி கரைச்சிக் கோட்டக்கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணங்களைச் செலுத்தி நேரடியாக சமர்ப்பித்தல் வேண்டும் எனவும், வருகை தரும் போது குறித்த மாணவர்களது வயதினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது பிறப்புச் சான்றிதழ்களையும் கொண்டு வருதல் வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப்படிவங்கள் உரிய பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் , இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0776991078 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ள
No comments:
Post a Comment