திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி!!!
கடந்த ஒரு வருடமாக முறையான சட்ட காரணங்களின்றி திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யுகப்பிரியன் (வயது 28) என்பவர் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மிகவும் உயிராபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட யுகப்பிரியன் இலங்கையிலிருந்து 3 மாதகால சுற்றுலா விசாவில் முறையான அனுமதியின்படி தமிழகம் வந்திருந்தார். இருந்தபோதும் அவரது விசாக்காலம் முடியும் முன்னரே அதாவது, இரண்டு மாதத்திற்குள் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டார் என்ற பொய்க் குற்றச்சாட்டில் மகிழுந்தில் (கார்) பயணம் செய்து கொண்டிருந்த வேளையிலேயே... கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அவரது உறவுகள் யாரும் இல்லாத நிலையிலும், தனது விடுதலை தள்ளிப்போவதை எண்ணியும் மிகவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்றைய தினமான இரவு 10:30 மணியளவில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
▼
No comments:
Post a Comment